F பழையவைகள் புதிதாகின
Our social:

24 Jan 2017

பழையவைகள் புதிதாகின

               பழையவைகள் புதிதாகின

இப்படியிருக்கஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால்புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்பழையவைகள் ஒழிந்துபோயின.எல்லாம்புதிதாயின. II கொரிந்தியர் – 5:17.

பிரியமானவர்களேகடந்த 2016ம் ஆண்டு முழுவதும் நம்மை வழிநடத்தினஆண்டவருக்கு நாம் நன்றி செலுத்துவோம்பழைய 2016 ம் வருஷம் கடந்துபோகிறதுபுதிய வருஷத்துக்குள் நாம் கடந்து போக போகிறோம்ஒரு புதியவீட்டுக்கு நாம் குடிபோகும் போது அந்த வீட்டை கழுவி சுத்தம் செய்து விட்டுஅதன் பின்பு தான் அந்த வீட்டிற்கு குடி போகிறோம்அதே மாதிரி இந்த புதியவருடத்திற்குள் நாம் கடந்து போகும் போது தேவனுக்கு பிரியமில்லாதநம்முடைய பழைய சுபாவங்கள்மற்றும் வேண்டாத காரியங்களை களைந்துவிட்டு புதிய சிருஷ்டியாக இந்த புதிய வருஷத்திற்க்குள் நாம் பிரவேசிப்போம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை பார்த்து நீங்கள் இந்த உலகத்திற்க்குஉப்பாய் இருக்கிறீர்கள் மேலும் இந்த உலகத்துக்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்என்று சொன்னார்நம்மில் எத்தனைபேர் உப்பு உணவுக்கு சுவையைகொடுப்பதுபோல பிறருக்கு பிரயோஜனமுள்ளவர்களாயிருந்தோம்??. நம்மில்எத்தனைபேர் தெய்வீக சுபாவத்தை அதாவது கிறிஸ்துவின் வெளிச்சத்தைபிறருக்கு வெளிப்படுத்தியிருக்கிறோம்?நம்மில் எத்தனை பேர் கிறிஸ்துவின்அன்பை கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு காட்டியிருக்கிறோம்.

எபேசியர் – 4-:22,23 அந்தப்படிமுந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும்இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி மெய்யான நீதியிலும்பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத்தரித்துக்கொள்ளுங்கள். என்று பவுல் சொன்னது போல இந்த புதியவருஷத்துக்குள் பிரவேசிப்பதற்கு முன்பாக மோசம்போக்கும் உலகஇச்சைகளாலே ஆளுகை செய்யப்பட்டிருக்கிற பழைய மனிதனின்சுபாவங்களை நாம் களைந்துபோட வேண்டும்மேலும்பரிசுத்த ஆவியால் நாம்ஆளுகை செய்யப்பட்டு கர்த்தராகிய இயேசுவின் சாயலை தரித்துக்கொள்ளவேண்டும்.அதாவது சாட்சியுள்ள கனி கொடுக்கும் வாழ்க்கை வாழநம்மை ஒப்பு கொடுப்போம்.நாம் கனிகொடுக்கக் கூடிய வாழ்க்கையைவாழவேண்டுமானால் நமக்கு தேவ வல்லமை தேவைஅப். 1:8 ல் பரிசுத்த ஆவிஉங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்துஎருசலேமிலும்யூதேயாமுழுவதிலும்சமாரியாவிலும்பூமியின் கடைசிபரியந்தமும்எனக்குச்சாட்சிகளாயிருப்பீர்கள் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்துக்குஎடுத்து கொள்ளபடுவதற்க்கு முன்பு சொன்னார்.

மேல் வீட்டறையில் பிதாவின் வாக்குத்தத்தமாகிய பரிசுத்த ஆவியானவரைபெற்றுகொண்ட இயேசுவின் சீஷர்கள் மற்றும் அப்போஸ்தலர்களுடையவாழ்க்கை வித்தியாசமாக மாறினதுஎசேக்கியேல் 36:27- உங்கள் உள்ளத்திலேஎன் ஆவியை வைத்துஉங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என்நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படிசெய்யவும்பண்ணுவேன்.என்று தேவன் முன்னறிவித்த காரியம் நிறைவேறியது.
இதை தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அப் 1:5 ல் பிதாவின் வாக்குதத்தம்நிறைவேற காத்திருங்கள் என்றார்.யோவான்-14:26, என் நாமத்தினாலே பிதாஅனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும்உங்களுக்குப் போதித்துநான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும்உங்களுக்கு நினைப்பூட்டுவார். என்று இயேசு கிறிஸ்து சொன்ன காரியம்நடந்தது.பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை பெற்ற சீஷர்கள் உயிருள்ளசாட்சியாய் வாழ்ந்தார்கள்.இயேசுவுக்காக தங்கள் வாழ்க்கையை ஒப்புகொடுத்தார்கள்.அவர்கள் சரீரத்திலிருந்து தேவ வல்லமை புறப்பட்டு சென்றுஅநேகரை சுகப்படுத்தியது.பிசாசின் பிடியிலிருந்து அநேகர்விடுவிக்கப்பட்டார்கள்.இறுதியில் ஒவ்வொருவரும் இயேசுவுக்காக இரத்தசாட்சியாக மரித்தார்கள்.ஊழியம் செய்வதற்க்கும் சாட்சியுள்ள வாழ்க்கைவாழ்வதற்க்கும் நமக்கு தேவ வல்லமை தேவை.இன்றைக்கு பரிசுத்தஆவியானவருக்கு நம் பிதாக்களை போல நாமும் எதிர்த்து நிற்கிறோம்.
இன்றைக்கு நம்மில் அநேகர் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையையும் அவர்வழிகாடுதலையும் வாஞ்சிப்பதில்லைஅநேக சபைகள் கூட பரிசுத்தஆவியானவரை புறக்கணிக்கின்றனஅவரே நம்மை சகல சத்தியத்துக்குள்நட்த்துவார் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னார்இந்தகடைசிகாலத்தில் நாம் தாகத்தோடு பரிசுத்த ஆவியானவரைவாஞ்சிப்போமென்றால் அவரை பெற்றுகொள்வேம்அவர் தான் நம்மைகிறிஸ்துவின் சாயலாக மாற்ற முடியும்அல்லேலூயா....

அடுத்ததாகபேதுரு 1-15ம் வசனத்தில் உங்களை அழைத்தவர்பரிசுத்தராயிருக்கிறதுபோல நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலும்பரிசுத்தராயிருங்கள் என்று வேதம் சொல்லுகிறதுஎபி 12-14 ல்பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லையே என்று பவுல்எழுதுகிறார்.கொரி – 6:16ல் நான் அவர்களுக்குள்ளே வாசம் பண்ணிஅவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன்அவர்கள் என்ஜனங்களாயிருப்பார்கள் என்று தேவன் சொல்லியிருக்கிறார்.

இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால்பிரியமானவர்களேமாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்கநம்மைச் சுத்திகரித்துக்கொண்டுபரிசுத்தமாகுதலை தேவபயத்தோடேபூரணப்படுத்தக்கடவோம்.( II கொரிந்தியர் 7:1)என்று பவுல்எழுதுகிறார்.பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் என்று வேதம்சொல்கிறது.இந்த புதிய வருடத்தில் கர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களைவிட்டு விலகி பரிசுத்தமாக வாழ நம்மை ஒப்பு கொடுப்போம்.அதாவதுதேவன்நம்மோடு இருக்கும்படி நம் இருதயத்தையும்நாம் தங்கும் வீட்டையும் நாம்ஆராதிக்கும் ஆலயத்தையும் சுத்திகரித்துக் கொண்டு பரிசுத்தமாதலின்பூரணத்தைப் பெற்று கொள்வோம்.
வேதாகமத்தில் கடைசி நாட்களில் நடக்கும் காரியங்களை பற்றிமுன்னறிவிக்கப்பட்டுள்ளது.

தீமோத்தேயு 3 :1-5 மேலும் கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்றுஅறிவாயாக.எப்படியெனில்மனுஷர்கள் தற்பிரியராயும்பணப்பிரியராயும்வீம்புக்காரராயும்அகந்தையுள்ளவர்களாயும்தூஷிக்கிறவர்களாயும்தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும்நன்றியறியாதவர்களாயும்பரிசுத்தமில்லாதவர்களாயும்,
சுபாவ அன்பில்லாதவர்களாயும்இணங்காதவர்களாயும்அவதூறுசெய்கிறவர்களாயும்இச்சையடக்கமில்லாதவர்களாயும்கொடுமையுள்ளவர்களாயும்நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
துரோகிகளாயும்துணிகரமுள்ளவர்களாயும்இறுமாப்புள்ளவர்களாயும்தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,
தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும்இருப்பார்கள்;
லூக்கா 21 9-11அப்பொழுது அவர் அவர்களை நோக்கிஜனத்துக்கு விரோதமாய்ஜனமும்,ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.
பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும்பஞ்சங்களும்கொள்ளைநோய்களும்உண்டாகும்வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரியஅடையாளங்களும் உண்டாகும்.
மத்தேயு 24 6-14 அப்பொழுதுஉங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்துஉங்களைக் கொலைசெய்வார்கள்என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகலஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
அப்பொழுதுஅநேகர் இடறலடைந்துஒருவரையொருவர் காட்டிக் கொடுத்துஒருவரையொருவர் பகைப்பார்கள்.
அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பிஅநேகரை வஞ்சிப்பார்கள்.
அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.
முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும்சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்அப்போது முடிவு வரும்லூக்கா 21 25-27சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.வானத்தின் சத்துவங்கள்அசைக்கப்படும்ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்துஎதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.
அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும்மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.

எனவே பிரியமானவர்களே!, வேதத்தில் சொல்லப்பட்ட எல்லாதீர்க்கதரிசனங்களும் நிறைவேறிவிட்டதுஇனி காலம் செல்லாதுஆகையால்நீங்கள் ஆண்டவராகிய இயேசுவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படும்படிஇந்த புதிய வருஷத்துக்குள் மாம்சத்திலும்ஆவியிலும் உள்ள எல்லா அசுசியும்நீங்க நம்மை சுத்திகரித்துக் கொண்டு இந்த புதிய வருடத்துக்குள்பிரவேசிப்போம்.
பேதுரு – 2:21. இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்ஏனெனில்கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டுநீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத்தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.
யோவான்-2:6. அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன்அவர்நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாம் வாழும்படியான மாதிரியை அதாவது நாம்எப்படி வாழ வேண்டும் என்ற மாதிரியை காண்பித்து விட்டுசென்றிருக்கிறார்.அவர் காட்டிய அடிச்சுவடு மத்தேயு 5,6,7 ம் அதிகாரங்களில்இருக்கிறதுஅவர் காட்டிய வார்த்தையின் வெளிச்சத்திலே நாம் நடக்கும்போதுதான் அனேகருக்கு நாம் வெளிச்சமாக இருக்க முடியும்வார்த்தையின்வெளிச்சத்தில் நாம் நடக்கும்படியாக அதாவது சகல சத்தியத்திற்குள் நாம்நடத்தப்படும்படியாக இந்த கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியானவரைவாஞ்சிப்போம்.

யோவான்-16:13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போதுசகலசத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்அவர் தம்முடைய சுயமாய்ப்பேசாமல்தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லிவரப்போகிறகாரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துசொன்னதை நடைமுறைப்படுத்துவோம்,
சாலமோன் ஜெபித்த போது அவன் கட்டிய ஆலயத்தில் தேவ மகிமைஇறங்கினதை ஜனங்கள் கண்டார்கள்அதேபோல இந்த நாட்களில் தேவ மகிமைஉங்கள் மேலும் வீடுகளிலும்சபைகளிலும் வெளிப்படப் போகிறதுமாம்சமானயாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று ஆண்டவர் சொல்லியவாக்குதத்தம் நிறைவேறும் காலத்தில் இருக்கிறோம்.எனவே இனிவரும்நாட்களில் அதிக நேரம் தேவ சமூகத்தில் தரித்திருந்து தேவ வல்லமையைபெற்றுக் கொண்டு உலகத்துக்கு வெளிச்சமாக இருப்போம்.

உங்கள் வாழ்க்கையில் தேவன் கொடுத்த நேரத்தை தேவனுக்காககொடுங்கள்.2017 ம் ஆண்டில் ஆண்டவருக்காக அதிக நேரத்தை அவர்சமூகத்தில் செலவிட தீர்மானம் எடுப்போம்.மீகா 3-8நானோ கர்த்தருடைய ஆவிஅருளிய பலத்தினாலும்நியாயத்தினாலும்பராக்கிரமத்தினாலும்நிரப்பப்பட்டிருக்கிறேன்.            ஏசாயா:32- 15,16                                       உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவிஊற்றப்படுமட்டும்  அப்படியே இருக்கும்அப்பொழுது வனாந்தரம் செழிப்பானவயல்வெளியாகும்,         செழிப்பான வயல்வெளி   காடாக எண்ணப்படும். 
 வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும்செழிப்பான வயல்வெளியிலே நீதிதங்கித்தரிக்கும்நீதியின் கிரியை சமாதானமும்நீதியின் பலன் என்றுமுள்ளஅமரிக்கையும் சுகமுமாம்..அல்லேலூயா.இந்த 2017 ம் ஆண்டு பாலைவனம்போன்ற உலர்ந்து போன காரியங்களை கர்த்தர் செழிப்பாக மாற்றப் போகிறார்.,

0 comments:

Post a Comment